Home உலகம் “ஆதாரங்களை வெளியிடுங்கள், அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வோம்!”- இம்ரான் கான்

“ஆதாரங்களை வெளியிடுங்கள், அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வோம்!”- இம்ரான் கான்

712
0
SHARE
Ad

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு அமைதி பேச்சுக்கு இடமில்லாத சூழல் நிலவி வரும் வேளையில், அத்தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை அளித்தால் உடனடியாக தாங்கள் நடவடிக்கைகள் எடுக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

அமைதியான சூழலில் இந்த விவகாரத்தைத் தீர்க்க பாகிஸ்தான் முனைப்புக் காட்டுவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இது விவகாரமாகப் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதத்துக்கு எதிராக உலகமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார். தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் எனவும், பொறுமைக் காக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதனை அடுத்து, பிரதமர் இம்ரான் கானின் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், வாய்ப்புகள் வழங்கப்பட்டால், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் எனவும், அது குறித்த ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் தர வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.