Home வணிகம்/தொழில் நுட்பம் தமிழ்நாடு: 2023-க்குள் எல்லா அரசு துறைகளிலும் மின்னியல் சேவை அறிமுகம்!

தமிழ்நாடு: 2023-க்குள் எல்லா அரசு துறைகளிலும் மின்னியல் சேவை அறிமுகம்!

1775
0
SHARE
Ad

சென்னை: 2023- க்குள், அனைத்து தமிழ்நாடு அரசு சேவைகளையும், எவ்விடத்திலிருந்தும் அல்லது அருகிலுள்ள பொது சேவை நிலையங்கள், மொபைல் தளங்கள் மற்றும் கையடக்க சாதனங்களைப் பயன்படுத்தி, இணையம் வழி பெறலாம் என தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது.

இவ்வாறான திட்டங்களினால், அரசு சார்ந்த விவகாரங்களில் மக்கள் உடனடியாக பயனடைவார்கள் என அத்துறை தெளிவுப்படுத்தியது.

சமீபத்தில், அதன் மின்னியல் அரசாங்கக் (eGovernance) கொள்கையை வெளியிட்ட தமிழ்நாடு அரசு, காகிதமற்ற அலுவலகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தை அறிவித்தது.

#TamilSchoolmychoice

அலுவலக பணிகளின் செயல்திறனை அதிகரிக்க, மாநில அலுவலகங்களில் மின்அலுவலகம் (e-Office) அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அமல்படுத்தப்படும் என அது குறிப்பிட்டிருந்தது. அரசாங்க கோப்புகள், ஆவணங்கள் மற்றும் பதிவுகள் மின்னியல் படிவத்தில் கிடைப்பதை உறுதி செய்ய, அவை படிகள் எடுக்கப்பட்டு எளிதில் அணுகக்கூடிய அமைப்பாக வடிவமைக்கப்படும் என அத்துறை கூறியுள்ளது.