Home நாடு “நான் தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு செல்லவில்லை”!- நஸ்ரி

“நான் தேமு சந்திப்புக் கூட்டத்திற்கு செல்லவில்லை”!- நஸ்ரி

997
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு, அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் பங்கேற்றால், மஇகா மற்றும் மசீச கட்சிகள், அச்சந்திப்புக் கூட்டத்தில் இடம்பெறாது என தெரிவித்திருந்தன.

இதனை அடுத்து, அக்கூட்டத்திற்கு தாம் கண்டிப்பாக வர இருப்பதாக நஸ்ரி தெரிவித்திருந்தார். ஆயினும், தற்போது, தாம் அக்கூட்டதில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். தேசிய முன்னணி சந்திப்புக் கூட்டதிற்கு தாம் வருவதாக இருந்தால், மஇகா மற்றும் மசீச கட்சிகள் அக்கூட்டத்தினை புறக்கணிக்கப் போவதாகக் கூறியதால்தான், தாம் அம்முடிவினை எடுத்ததாக நஸ்ரி கூறினார்.

நஸ்ரி அக்கூட்டத்தில் பங்கெடுத்தால், சட்டரீதியான பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளதாகவும், அவ்வாறான பிரச்சனைகளை தவிர்ப்பதற்கே நஸ்ரியின் பங்கேற்பை எதிர்ப்பதாக மஇகா மற்றும் மசீச கட்சிகள் தெரிவித்தன.