Home இந்தியா தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல்!

தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-இல் இடைத்தேர்தல்!

585
0
SHARE
Ad

சென்னை: இந்திய நாடு முழுவதும் தேர்தலை எதிர் நோக்கி உள்ள நிலையில், 543 தொகுதிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23-ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கும் வருகிற மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சமீபத்தில் காலியான சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி இந்த நான்கு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.