Home நாடு நஜிப், எஸ்ஆர்சி வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது உண்மை!

நஜிப், எஸ்ஆர்சி வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது உண்மை!

969
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி நிதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான விசாரணை இரண்டாவது நாளான இன்று திங்கட்கிழமை காலை 9.46 மணியளவில் தொடங்கியது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு தொடங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் ஊழல் விசாரணைக்குத் தொடர்புடையவை என நம்பப்படும் வங்கி ஆவணங்கள் மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் ஆவணங்கள், கடந்த 2015-ஆம் ஆண்டில் அம்பேங் வங்கியிலிருந்து பெறப்பட்டதாக  தேசிய வங்கியின் மேலாளர் அசிசுல் அட்சானி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

2001-ஆம் ஆண்டுக்கான பண மோசடி, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் அவரும், மூன்று அதிகாரிகளும் குறிப்பிட்ட அவ்வங்கியை சோதனை செய்ததாக அவர் தெரிவித்தார். அசிசுல் இந்த வழக்கு விசாரணையில் இரண்டாவது சாட்சி ஆவார்.

அக்கிளை வங்கியின் மேலாளரான ஆர்.உமா தேவியிடம் விசாரிக்கப்பட வேண்டிய கணக்குகளின் விவரங்களை கொடுத்ததாகவும், பின்பு அவர் அதற்கு கீழ்ப்படிந்து எல்லா விவரங்களையும் வழங்கியதாகவும் அசிசுல் கூறினார்.

நஜிப்பின் வங்கி கணக்கு திறக்கப்பட்டதற்கான ஆவணங்களும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பாக திறக்கப்பட்ட மூன்று வங்கி கணக்குகளையும்  உள்ளடக்கிய ஆவணங்களைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று திங்களன்று நீதிமன்றத்தில், அந்த ஆவணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன என அசிசுல் உறுதிப் படுத்தினார்.