Home உலகம் வட கொரியா: புதுரக சக்திவாய்ந்த ஆயுதம் பரிசோதனை!

வட கொரியா: புதுரக சக்திவாய்ந்த ஆயுதம் பரிசோதனை!

694
0
SHARE
Ad

பியொங்னாங்: அண்மையில், இரு முறை அணு ஆயுத செயல்பாடுகள் குறித்த சந்திப்பினை அமெரிக்காவும், வட கொரியாவும் மேற்கொண்டு, அவை தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, புதிய வகையான ஆயுதம் ஒன்றை வட கொரியா சோதனை செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

இது தொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசு செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், இதனை பற்றி தெளிவான தகவல்கள் சொல்லப்படவில்லை. ஆனால், இது சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையால் மீண்டும் அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கான உறவு முறை பாதிப்படையும் எனக் கருதப்படுகிறது.

இந்த சோதனையை, வட கொரியாவின் அதிபர் கிம் மேற்பார்வையிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு, வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை ஆகும்.