Home நாடு முகமட் சாம்ரி வினோத் ஏற்கனவே குற்றங்கள் புரிந்தவர்

முகமட் சாம்ரி வினோத் ஏற்கனவே குற்றங்கள் புரிந்தவர்

943
0
SHARE
Ad

கங்கார் – இந்து மதத்தை இழிவுபடுத்தி காணொளி வெளியிட்டவரும், சர்ச்சைக்குரிய மத போதகர் சாகிர் நாயக்கின் சகாக்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான, 34 வயது முகமட் சாம்ரி வினோத் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெர்லிஸ் மாநிலத்தின் கங்காரில் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி கிளந்தான் கம்போங் பஞ்சோரில் உள்ள அஸ்-சித்திகின் பள்ளிவாசலில் அவர் வழங்கிய சமய உரை தொடர்பில் அவர் விசாரிக்கப்படுகிறார்.

அவர்மீது ஏற்கனவே, குற்றவியல் ஆதாரங்கள் இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

“நம்பிக்கை மோசடி, ஒருவர் மீது காயம் விளைவித்தது, பாலியல் வன்புணர்ச்சி ஆகிய வழக்குகளுக்காக அவர் விசாரிக்கப்படுகிறார்” என பெர்லிஸ் மாநில காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் (சீனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர்) டத்தோ நூர் முஷார் முகமட் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதற்கொண்டு சாம்ரி வினோத் மீது 13 புகார்கள் கிடைக்கப்பட்டதாக செபராங் பிறை தெங்கா காவல் நிலையத் தலைவர் (ஓசிபிடி) நிக் ரோஸ் அசான் நிக் அப்துல் ஹமிட் கூறியுள்ளார்.

அவர் மீது ஏராளமான புகார்கள் நாடு முழுமையிலும் உள்ள காவல் நிலையங்களில் அண்மைய சில நாட்களாகச் செய்யப்பட்டு வந்த நிலையில் – பல தரப்புகள் அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் – அவர் காவல் துறையின் கடுமையான குற்றங்களுக்கான டி-9 (D9) பிரிவினரால் நேற்று பெர்லிஸ் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

ஒற்றுமையைக் குலைப்பது, மக்களிடையே இன விரோதத்தைத் தோற்றுவித்தது, ஆகிய குற்றங்களுக்காகவும், பல்ஊடக தொடர்பு சட்டத்தின் அடிப்படையிலும் அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.