Home கலை உலகம் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ வெளிவர தயார்!

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ வெளிவர தயார்!

823
0
SHARE
Ad

சென்னை: 2009-ஆம் ஆண்டு வெளிவந்து பெரிய அளவில் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் நாடோடிகள். இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நட்பை முன்னிலைப்படுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.  இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, நமோ நாராயணன், ஜி.ஞானசம்பந்தம், சூப்பர் சுப்புராயன், எம்.எஸ். பாஸ்கரன், ரவிபிரகாஸ், சிரஞ்சனி இன்னும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகி உள்ளதாக திரைப்படக்குழு தகவல் வெளியிட்டுள்ளதுபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.