Home நாடு 42 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது!

42 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது!

604
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதிமூன்றாவது நாள் விசாரணை இன்று திங்கட்கிழமை தொடங்கியது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் 2014-ஆம் ஆண்டு மற்றும் பிப்ரவரி 2015-ஆம் ஆண்டு, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மற்றும் ஏஷான் பெர்டானா வங்கிக் கணக்குகளிலிருந்து மூன்று பரிவர்த்தனைகளின் வழி 42 மில்லியன் ரிங்கிட் பணம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு செலுத்தப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா அபின் பேங்க் கிளையின் மேலாளர், நோர்ஹாயாதி முகமட் யூனுஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மொத்தம் 27 மில்லியன், 10 மில்லியன் மற்றும் 5 மில்லியன் ரிங்கிட்டாக அம்மூன்று பரிவர்த்தனைகளும் நடந்துள்ளது என அவர் கூறினார்.

30-வது சாட்சியாளரான சுலைமான் கொ கூறுகையில், 1108 என முடியும் ஏஷான் பெர்டானா வங்கி கணக்கிலிருந்து 27 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப்பின் அம்பேங்க் வங்கி கணக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி செலுத்தப்பட்டதாகக் கூறினார்.

அதே அபின் பேங் வங்கி கணக்கிலிருந்து அதே நாளில் 5 மில்லியன் ரிங்கிட் நஜிப்பின் மற்றொரு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி, நஜிப்பின் 880 என முடியும் நஜிப்பின் வங்கிக் கணக்கில் 10 மில்லியன் ரிங்கிட் பணம் செலுத்தப்பட்டதாக நோர்ஹாயாதி கூறினார்.