Home நாடு சண்டாக்கான்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

சண்டாக்கான்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது!

558
0
SHARE
Ad

சண்டாக்கான்: மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் முன் கூட்டியே வாக்களிப்பு இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது. இம்முறை இத்தேர்தலில் சுமார் 270 காவல் துறை அதிகாரிகள் வாக்களிக்க உள்ளனர்.

இரண்டு வாக்களிப்பு மையங்கள் இதற்காக திறக்கப்பட்டிருக்கும் என தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

சண்டாக்கான் கடல் காவல் படை மூத்த அதிகாரிகளின் உணவிடத்தில் சுமார் 170 காவல் அதிகாரிகள், காலை 8 மணி தொடங்கி மதியம் 2 மணியளவிலும் வாக்களிக்க இருக்கும் வேளையில், சண்டாக்கான் மாவட்ட காவல் தலைமையக மன்றத்தில் சுமார் 100 காவல் அதிகாரிகள் மதியம் 12 மணியளவில் தங்களின் வாக்குகளை செலுத்த உள்ளனர்.

#TamilSchoolmychoice

சண்டாக்கானில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவ உள்ளதுநம்பிக்கைக் கூட்டணி சார்பாக ஜசெக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகளான விவியன் வோங் போட்டியிடும் வேளையில்ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினரான லிண்டா சென் போட்டியிடுகிறார்.

இவர்களை தவிர்த்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களம் இறங்கி உள்ளனர்.  முன்னாள் அமானா கட்சியின் உறுப்பினரான ஹம்சா அப்துல்லாசியா சியூ யோங் மற்றும் சுலாய்மான் அப்துல் சாமாட் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த மார்ச் 28-ஆம் தேதி சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர்ஸ்டீபன் வோங் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து சண்டாக்கானில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளதுஇரண்டு சட்டமன்றங்களைக் கொண்டுள்ள சண்டாக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 40,131 வாக்காளர்கள் உள்ளனர்அவர்களில் 270 வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்க உள்ளனர்.

கடந்த 14-வது பொதுத் தேர்தலில், 10,098 பெரும்பான்மை வாக்குகளுடன் ஜசெக கட்சி வேட்பாளரான ஸ்டீபன் வோங் தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ லிம் மிங் ஹூவை தோற்கடித்தார்.