Home உலகம் பாகிஸ்தான்: 400 பேருக்கு மேல் எச்ஐவி நோய் பாதிப்பு!

பாகிஸ்தான்: 400 பேருக்கு மேல் எச்ஐவி நோய் பாதிப்பு!

769
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: தெற்கு பாகிஸ்தானில் இருக்கும் வசாயோ என்ற கிராமத்தில் சுமார் 400 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்த உள்ளூர் மருத்துவர் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்ட ஊசியை பயன்படுத்தியதுதான் இந்த நோயிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

சுமார் ஐந்து இடங்களில் தற்போது கிராம மக்கள் அனைவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்து சோதனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது குழந்தைகள் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இ ந் நோய் பல்வேறு இடங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

#TamilSchoolmychoice

பாகிஸ்தானில் 2017-ஆம் ஆண்டு மட்டும், புதிதாக 20,000 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டனர். தற்போது ஆசிய அளவில் அதிக எச்ஐவி நோயாளிகளை கொண்டுள்ள இரண்டாவது நாடாக பாகிஸ்தான் உருவெடுத்துள்ளது.