Home நாடு ஈப்போ: நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

ஈப்போ: நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

889
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் மாநில நாடாளுமன்ற உறுப்பினரின் முன்னாள் உதவியாளர், சம்பந்தப்பட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினரால் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டதாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

பாலியல், பாலுணர்வு எழுத்துப் பதிவுகள் மற்றும் பாலியல் படங்களை அவருக்கு காண்பித்ததாக தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 2018 ஆண்டு முதல் ஏப்ரல் 2019 ஆண்டு வரையிலும், அவர் தம்மிடன் வேறு விதமாக நடந்து கொண்டதாகவும், “அம்மு” மற்றும் “”சயாங்” என்று அழைக்கத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த படங்களும் பதிவுகளும் நேற்று வெள்ளிகிழமை சமூகப்பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. ஒரு நாளைக்கு 50 -க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளை அந்நபர் அனுப்புவார் என்றும் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒருநாடாளுமன்றஉறுப்பினராகநடந்துகொள்ள வேண்டி, பலமுறை அவர் கூறியும் அந்நபர் கேட்காததை அவர் குறிப்பிட்டார்.

ஸ்டார் நாளிதழ் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்புக் கொள்ள முற்பட்டபோது, அவர் பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினரும், தமது முன்னாள் உதவியாளரால் தாம் மனதளவில் சித்திரவதையை அனுபவித்து வருவதாகவும் காவல் துறையில் புகார் அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்துரைத்த பேராக் மாநில மந்திரி பெசார், நியாயமான முறையில் காவல் துறை இந்த புகாரினை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.