Home இந்தியா நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிதம்பரத்தில் திருமாவளவன் 3,219 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிதம்பரத்தில் திருமாவளவன் 3,219 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

631
0
SHARE
Ad

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார்.

வாக்குகள் எண்ணப்பட்டது முதல் அதிமுக வேட்பாளார் திருமாவளவன் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் தொல்திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்

இதனைத் தொடர்ந்து அவர் கருத்துரைக்கையில், “கடுமையான போட்டிக்கிடையே வெற்றி பெற்றிருக்கிறோம். எனது வெற்றியை சிதம்பரம் மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன். தமிழகம் எப்போதும் சமூக நீதியின் அடிப்படையில் தான் பயணிக்கும் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  

#TamilSchoolmychoice

நீண்ட இழுபறிக்குப் பின்னர் அவர் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.