Home நாடு முக்ரிஸ் மகாதீர்: ஜோகூர் சுல்தானிடம் கை கொடுக்காமல் சென்றது ஏன்?- மக்கள் சாடல்

முக்ரிஸ் மகாதீர்: ஜோகூர் சுல்தானிடம் கை கொடுக்காமல் சென்றது ஏன்?- மக்கள் சாடல்

840
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்காமல் வணங்கி மட்டும் சென்ற கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் சமூகப்பக்கங்களில் சாடி வருகின்றனர்.

14 வினாடிகளைக் கொண்ட ஒரு காணொளியை துங்கு மக்கோத்தா ஜோகூர் இன்று வெள்ளிக்கிழமை சமூகப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த காணொளியில் முக்ரிஸ் மகாதீர், ஜோகூர் சுல்தானை வணங்கி கைகுலுக்காமல் இதர சுல்தான்களுடன் கை குலுக்கும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, சுல்தான் ஜோகூர் மற்றும் பிரதமர் மகாதீருக்கும் இடையில் மோதல்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. துங்கு மக்கோத்தா ஜோகூர், மகாதீரிடம் கைக்கொடுக்கும் போது, ஏன் முக்ரிஸ் அதனை செய்யக்கூடாது என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையே, முகிரிஸின் இந்த செயலுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஜோகூர் மாநில அம்னோ இளைஞர் பிரிவுக் கேட்டுக் கொண்டுள்ளது.