Home இந்தியா தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்தி வருகின்றனர்!

தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்தி வருகின்றனர்!

649
0
SHARE
Ad

புது டில்லிதொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய விசாரணை அதிகாரிகள் இலங்கையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதற்கிடையே இலங்கையில் குண்டுவெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் இந்தியாவுக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அவர்கள் காஷ்மீரில் பயிற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது

இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்தியாவின் சில பகுதிகளில் சோதனை வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் இலங்கை சென்றுள்ளனர். அங்கு இலங்கை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது

#TamilSchoolmychoice

குண்டுவெடிப்புக்கு முதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலமாக, இலங்கையில் அவசர நிலை நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது