Home நாடு “மதம் முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் நாடு!”- டாயிம்

“மதம் முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் நாடு!”- டாயிம்

839
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டு மக்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்கும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும், இந்நாட்டின் நலனை மக்கள் முதலாக கருத்தில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் டாயிம் சைனுடின் தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பு முக்கியமானது. நாம் அதனை மதிக்கிறோம், ருகூன் நெகாராவை மதிக்கிறோம். ஆயினும், நாம் எல்லோரும் மலேசியர்கள். மலேசியாவை முன்னிலைப்படுத்தினால், கண்டிப்பாக நாடு பாதுகாப்பாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

“ஒரு சிலர் சபா மற்றும் சரவாக்கின் உரிமைகளைப் போராடுவதாக கூறுகின்றனர். மேலும், மதம்தான் முக்கியம் என்றும் கருத்துரைக்கின்றனர். ஆனால், அதைவிட முக்கியமானது நாடு” என்று டாயிம் கூறினார்.