Home உலகம் உலகக் கிண்ண கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் இரத்து

உலகக் கிண்ண கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் இரத்து

1436
0
SHARE
Ad

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரிசையில் இன்று வியாழக்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் இரசிகர்கள் காத்திருந்த இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே மோசமான வானிலையால் அடுத்தடுத்து சில ஆட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதால், கிரிக்கெட் போட்டிகள் சுவாரசியத்தையும், பரபரப்பையும் இழந்திருக்கின்றன.

இன்று வியாழக்கிழமை பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட  இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டியில்  குழுக்களுமே இதுவரை தோல்வியடையாமல் விளையாடிக் கொண்டிருப்பதால், இந்த ஆட்டத்தில் வெல்லப் போவது யார் என்ற கேள்வி கிரிக்கெட் இரசிகர்களிடையே பரபரப்பாக உலவி வந்தது.

#TamilSchoolmychoice

ஆனால் ஆட்டம் இரத்து செய்யப்பட்டு இரண்டு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டிருக்கிறது.

உலகக் கிண்ணத்திற்கான 10 நாடுகள் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் முதல் இரண்டு இடத்தைப் பிடித்திருக்கின்றன. இங்கிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன.