Home வணிகம்/தொழில் நுட்பம் தித்தியான் டிஜிட்டல் : மலாக்கா மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

தித்தியான் டிஜிட்டல் : மலாக்கா மாநில தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

1186
0
SHARE
Ad

மலாக்கா – தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் காணப்பெற்று வருகின்றது.

புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் திறனறிவு (ICT) இடைவெளியைக் குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் அமைக்கப்பட்டதன் வழி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டிகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூக கல்வி அறவாரியம், மலேசிய உத்தமம் அமைப்பு ஆகியவை இணைந்து இப்போட்டியை வழிநடத்துகின்றன.

#TamilSchoolmychoice

இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

மலாக்கா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த சனிக்கிழமை ஜூன் 15-ஆம் தேதி  தேசிய வகை டுரியான் துங்கால் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்  சாமிநாதன் கணேசன் கலந்து கொண்டு திறப்புரை ஆற்றினார்.

அவர் தம் உரையில், இன்றையப் போட்டியில் பங்குக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மலாக்கா மாநிலத்தில் முதல் முறையாக நடைபெறும் இப்போட்டியில் 20 தமிழ் பள்ளிகள் கலந்துகொண்டது பெருமையாக உள்ளது எனவும் அடுத்த வருடம் முழுமையாக 21 தமிழ்பள்ளிகளும் பங்கெடுக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தனது முழு ஒத்துழைப்பும் ஆதரவும் தமிழ்பள்ளியின் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக என்றும் இருக்கும் என்றும் அவர் தமதுரையில் கூறினார். மேலும் தமிழ்பள்ளிகளின் கணினி மையத்தைச் சீரமைத்து செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறினார்.

தித்தியான் திட்டத்தின் வழி முழுமையாக தொழில்நுட்ப தாக்கம் மலாக்காவில் உள்ள அனைத்து தமிழ்பள்ளிகளுக்கும் சென்றடைய வேண்டும் எனவும், அதற்காக அனைத்து நல்லுள்ளங்களும் ஒன்றினைந்து செயல் பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் எனவும் அவர் தம் உரையில் பதிவு செய்தார்.

தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் சேவை எதிர்வரும் தொழில்நுட்பமான 4.0 -ஐ எதிர்கொள்ளும் வண்ணம் அமைந்திருப்பதை பாராட்டி, மாணவர்களுக்குச் சரியான முன்னேற்றப் பாதையை வகுத்துக் கொடுக்க அனைத்து தமிழ்ப் பள்ளிகளும் இதனைக் கருத்தில் கொண்டு முன்வர வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

இவ்வாண்டு மலாக்கா மாநிலத்திலிருந்து சுமார் 59 மாணவர்களும் 20 பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன.

அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, & ஸ்கேரேட்ஸ் போட்டிகள் ஆகியவற்றில் மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.

தேசிய நிலையிலான . தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் நடைப்பெறும்.

மலாக்கா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பின்வருமாறு:-

MELAKA STATE LEVEL ICT QUIZ WINNERS 2019

1. சவுமியா கனேசன், புலாவ் செபாங் தமிழ்பள்ளி
2. நனினேசன் சங்கர், பெகான் தெபொங் தமிழ்பள்ளி
3. நர்மதா குணாளன், பத்தாங் மலாக்கா தமிழ்பள்ளி
4. திவ்யன் கார்த்திகேசன், செர்கம் தோட்ட தமிழ் பள்ளி
5. நவிவர்மா மோகன் பெகான், தெபொங் தமிழ் பள்ளி
6. யாதவன் நமெஷ், டுரியான் துங்கால் தமிழ்பள்ளி
7. அருமதி செல்வராஜ், டுரியான் துங்கால் தமிழ்பள்ளி
8. விசாலி ராமராஜு, டுரியான் துங்கால் தமிழ்பள்ளி
9. சஞ்சீவன் குமர வடிவேலு, புலாவ் செபாங் தமிழ் பள்ளி
10. நிரோசன் கிலேமன்த், புகிட் லிந்தாங் தமிழ்பள்ளி
11. கலைச்செல்வி விமலன், பாயா ரும்புட் தமிழ்பள்ளி
12. கோகிலேசிரி மகேந்திரன், புகிட் காஜாங் தமிழ்பள்ளி

மேற்காணும் பட்டியல்படி மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 12 நிலை வெற்றியாளர்களான இம்மாணவர்கள் தேசிய நிலையிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.