Home நாடு அம்னோ கட்சியின் முடக்கப்பட்ட பணம் 1எம்டிபி நிதியிலிருந்து பெறப்பட்டதல்ல!- அனுவார் மூசா

அம்னோ கட்சியின் முடக்கப்பட்ட பணம் 1எம்டிபி நிதியிலிருந்து பெறப்பட்டதல்ல!- அனுவார் மூசா

574
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதிகாரிகளால் முடக்கப்பட்ட அம்னோ கட்சியின் கணக்கில் உள்ள பணத்திற்கும் 1எம்டிபிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று சனிக்கிழமை உறுதியாகக் கூறினார்.

அம்னோ கட்சி கணக்கில் முடக்கப்பட்ட நிதிகள் அனைத்தும் கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் பெறப்பட்டது என்று அவர் கூறினார்.

இது குறித்த ஆவணங்களை விரிவாகப் பார்த்ததால் இந்த உறுதியை நான் செய்யத் துணிகிறேன்.” என்று அவர் குறிபிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த 2011, 2012, மற்றும் 2013-இல் நஜிப்பின் கணக்கிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதிகள் யாவும் 2014-ஆம் ஆண்டில் முழுமையாக பயன்படுத்தப்பட்டன.  2018-இல் கணக்கிலிடப்பட்ட நிதியானது கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டில் பெறப்பட்டதாகும். அதற்கும் 1எம்டிபி நிதிக்கும் சம்பந்தம் இல்லை” என்று அவர் கூறினார்.

1எம்டிபியிலிருந்து அம்னோ பணம் பெற்றதாகக் கூறப்படுவதை நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி 1எம்டிபி நிதியுடன் தொடர்புடையதாக நம்பப்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களில் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடக்கியது.