Home இந்தியா சரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் காலமானார்!

சரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால் காலமானார்!

1001
0
SHARE
Ad

சென்னை: சரவணபவன் உணவக உரிமையாளர் இராஜகோபால், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு எதிராக கொலை வழக்கு தொடுக்கப்பட்டு அதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை வழக்கில், சரவண பவன் உரிமையாளர் இராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது.

சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணியாற்றியவரின் மகள் ஜீவஜோதி என்பவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்இதனிடையே ஜீவஜோதியை அடைவதற்காகஅவரது கணவரைஇராஜகோபால் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2004-ஆம் ஆண்டுஇராஜகோபாலுக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்

உடல் நிலையை காரணம் காட்டி இராஜகோபால் ஜாமின் பெற்றுசிறையிலிருந்து வெளியே வந்தார்இந்த வழக்கில்இராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது

இதனையடுத்துஉச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்துஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடைந்து சிறை செல்ல வேண்டும் என உத்தரவிட்டது

ஆயினும், உடல்நிலை சரியில்லாததால்சரணடைய அவகாசம் கோரிஇராஜகோபால் தரப்பில்உச்ச நீதிமன்றத்தில்ஜூலை 8-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம்அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட நிலையில், உடல்நிலை எப்படி இருந்தாலும் இராஜகோபால் உடனடியாக சரணடைந்து சிறைக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிட்டது

அவருக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலை மோசமானக் காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது