Home நாடு ஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்!

ஜோகூர் மாநில பிகேஆர் கட்சி தலைவர் பதவி விலகினார்!

785
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர் மாநில பிகேஆர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஹசான் காரிம் விலகியதாகக் கூறப்படுகிறது.

தற்போது, ஊடகங்களில் முக்கிய அங்கமாக வகித்து வரும் அன்வார் மற்றும் அஸ்மின் இடையிலான கருத்து முரண்பாடு விவகாரங்களுக்கும் ஹசானின் பதவி விலகலுக்கும் எவ்வித தொடர்புமில்லை என வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

அவர் (ஹசான்) கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்வாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஆனால், இந்த் அபதவி விலகல் கட்சியில் ஏற்பட்டுள்ள தகராறுடன் தொடர்பானது அல்லஎன்று சம்பந்தப்பட்ட வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இன்று வெள்ளிக்கிழமை காலையில் பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற மாநில பிகேஆர் தலைவர்கள் கூட்டத்தில் ஹசான் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஜோகூர் மாநில பிகேஆர் கட்சித் தலைவராக தம்மை நியமிப்பதை ஹசான் நிராகரித்தார்