Home One Line P1 அடுத்தக் கட்ட நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படும்!

அடுத்தக் கட்ட நடவடிக்கை இல்லை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படும்!

538
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: அடுத்தக்கட்ட நடவடிக்கை இல்லை (என்எப்ஏ) என வகைப்படுத்தப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க சாத்தியம் உள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது.

இது அவர் செய்ய வேண்டிய ஒன்று என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா கூறினார்.

இருப்பினும், இந்நேரத்தில் இந்த விவகாரம் குறித்து மேலதிக விவரங்களை வழங்க முடியாது என்று லத்தீஃபா கூறினார்.

#TamilSchoolmychoice

என்எப்ஏ வழக்குகள் எவ்வளவு தூரம் மீண்டும் ஆராயப்படும் என்று கேட்டதற்கு, லத்தீஃபா மீண்டும் ஒரு குறிப்பிட்ட பதிலை வழங்கவில்லை, ஆனால் அது பழைய கோப்பாக இருக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

கடந்த மாதம், கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யி, அப்துல் தாய்ப் சம்பந்தப்பட்ட கோப்புகளை எம்ஏசிசி மீண்டும் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து விவாதிக்க லத்தீஃபாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.