Home One Line P1 காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் குறித்து முடிவு செய்யப்படும்!

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் குறித்து முடிவு செய்யப்படும்!

688
0
SHARE
Ad

புது டில்லி: காங்கிரஸ் கட்சிக்கு நேருகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிக காலம் தலைவராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அது மாறுவதற்கான காலமும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ராகுல் காந்தி, கட்சியின் தலைவராக இருந்து காங்கிரஸை சிறப்பாக வழிநடத்தியதற்கு இன்று சனிக்கிழமை கூடும் செயற்குழு நன்றி தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது

ஆகவே, டெல்லியில் இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் படுதோல்வியை சந்தித்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்திருந்தார். ராகுலின் பதவி விலகலை செயற்குழு ஏற்கமால் இருந்தது. எனினும், தனது பதவி விலகல் முடிவில் ராகுல் உறுதியாக இருந்து வந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோனி, அகமது பட்டேல், கே.வி.வேணுகோபால், உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வந்துள்ளது

தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவர்களில் முகுல் வாஸ்னிக் (59) தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாகப் பேசப்படுகிறது