Home One Line P2 பிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேறப் போகும் பங்கேற்பாளர்…..?

பிக் பாஸ் 3 : இந்த வாரம் வெளியேறப் போகும் பங்கேற்பாளர்…..?

867
0
SHARE
Ad

சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் உலகம் எங்கும் உள்ள இரசிகர்களைக் கவர்ந்து ஒளியேறிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் மூன்று பேர் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அபிராமி, லோஸ்லியா மற்றும் சாக்‌ஷி ஆகியோரே அந்த மூவராவர்.

எனினும், இந்த வாரம் யாரும் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்ற கருத்து சமூக ஊடகங்களில் உலவி வருகிறது. காரணம், பொதுமக்கள் மத்தியில் எதிர்பாராதவிதமாக சரவணனுக்கு எதிராக மகளிர் அமைப்புகளில் இருந்து எழுந்த கண்டனங்கள் காரணமாக, அவர் பாதியிலேயே கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கல்லூரி காலங்களில் நானும் பேருந்துகளில் பெண்களோடு உரசுவது போன்ற காரியங்களைச் செய்திருக்கிறேன் என சரவணன் கூறியது – அதை கமல்ஹாசன் கண்டிக்காதது – போன்ற அம்சங்கள் குறித்து, பாடகி சின்மயி போன்றவர்கள் சமூக ஊடகங்களில் கண்டனக் குரல்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து மகளிர் சிலர் ஸ்டார் விஜய் அலுவலகம் முன்பு திரண்டு தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து திடீரென பாதியிலேயே சரவணன் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றுப்பட்டு விட்டதால் இந்த வாரம் வேறு யாரையும் வெளியேற்ற வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது.

இதற்கிடையில் வைல்ட் கார்டு எனப்படும் மக்கள் தேர்வு மூலம் நடிகை கஸ்தூரி 17ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது.

அதற்கேற்ப, நேற்று சனிக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் வழக்கமாக காப்பாற்றப்படுபவர் யார் என்பதைக் கூற முற்படும் கமல்ஹாசன் இந்த வாரம் யாரையும் பெயர் குறிப்பிடாமல், காப்பாற்றப்படுபவரை நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) பெயர் குறிப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

எனவே, இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறும் நிகழ்ச்சியில், யாராவது வெளியேற்றப்படுவார்களா? அல்லது இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படப் போவதில்லை என்ற அறிவிப்பு வருமா? அல்லது ஒருவர் வெளியேற்றப்படுவதுபோல் வெளியேற்றி இன்னொரு இரகசிய அறையில் இருந்து பிக்பாஸ் இல்ல நடவடிக்கைகளை அவர் கண்காணிப்பாரா? என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும்.