Home One Line P1 எலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு!

எலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு!

1059
0
SHARE
Ad

கொழும்பு: இங்குள்ள புத்த கோயிலில், 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானை எலும்பும் தோலுமாக உடல்நிலை சரியில்லாமல் ஊர்வலத்தில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளது  குறித்து இலங்கை சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சர் ஜான் அமரதுங்கா விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.  

சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை கூறுகையில், “டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்திற்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆயினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த யானையின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால், யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை.