Home One Line P1 சிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ

சிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் கோருகிறது சிபிஐ

606
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 8.30 மணி நிலவரம்) நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) இரவு கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் புதுடில்லி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

அவரை 5 நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபில், அபிஷேக் மனு சிங்வி ஆகிய இருவரும் அவருக்கு தடுப்புக் காவல் வழங்கக் கூடாது என வாதாடினர்.

#TamilSchoolmychoice

இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி விரைவில் தனது தீர்ப்பை வழங்கப் போவதாகக் கூறி நீதிமன்ற விசாரணையை ஒத்தி வைத்தார்.

எந்த நேரத்திலும் நீதிபதியின் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.