Home One Line P2 ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

708
0
SHARE
Ad

சென்னை: முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை, முன் கூட்டியே விடுவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏழு பேரை விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் அரசு கேட்க வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனையைக் குறைப்பது உள்ளிட்ட மாநில அரசின் அதிகாரத்தை நீதிமன்றங்கள் செயல்படுத்த முடியாது. நீதிமன்றம், முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க மட்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது

#TamilSchoolmychoice

இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் ஏழு பேரை விடுவிக்க கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்