Home One Line P1 மின்கலன் பிரச்சனைகள் உள்ள ஆப்பிள் மடிக்கணினிகளை எம்ஏஎஸ், ஏர் ஆசியா தடை செய்துள்ளது!

மின்கலன் பிரச்சனைகள் உள்ள ஆப்பிள் மடிக்கணினிகளை எம்ஏஎஸ், ஏர் ஆசியா தடை செய்துள்ளது!

1082
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு மலேசிய விமான நிறுவனங்களான மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியா, குறிப்பிட்ட ஆப்பிள் மடிக்கணினிகளின் மின்கலன்கள் பிரச்சனைகளால் அவற்றிற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.  இவை அதிக வெப்பமடையக்கூடும் என்ற படியால் ஆப்பிள் நிறுவனம் அவற்றை மீண்டும் கோரியிருந்தது.

பழைய 15ஐஎன் மேக்புக் ப்ரோ மாடல்களை மலேசியா ஏர்லைன்ஸ் கட்டுப்படுத்துவதாக அறிவித்திருந்தது. இது செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரை விற்கப்பட்ட மாதிரிகளாகும்.

மேலதிக அறிவிப்பு வரும் வரை பயணிகள் விமானங்களில் அம்மாதிரி மடிக்கணினிகளைக் கொண்டு வர அனுமதிக்கப்படாது என்று அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆப்பிளின் திரும்பக் கோரும் திட்டத்தின் கீழ் மின்கலனை மாற்றியமைத்த பயணிகள் விமானத்தினுள் நுழைவதற்கு முன் சான்றாக அது குறித்த ஆவணங்கள் அல்லது ரசீதை வழங்க வேண்டும் என்று எம்ஏஎஸ் குறிப்பிட்டுள்ளது.

இதே அறிவிப்பை, ஏர் ஏசியா பயண அறிவிப்புகள் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்கலன் பிரச்சனைக் கொண்ட எந்தவொரு தயாரிப்பு நினைவுகூரலுக்கு உட்பட்ட பொருட்களை விமான நிறுவனம் தடை செய்வதாகக் கூறியுள்ளது.

கடந்த ஜூன் 20-ஆம் தேதியன்று ஆப்பிள் நிறுவனம், மின்கலன் பிரச்சனைகளால் மேக்புக் ப்ரோ மடிக்கணினிகளை திரும்பக் கோரியிருந்தது.