Home One Line P1 அம்னோவை ‘காபிர்’ என அழைத்ததை பாஸ் மீட்டுக் கொள்ளட்டும், அதன் பிறகு இணையட்டும்!”- மகாதீர்

அம்னோவை ‘காபிர்’ என அழைத்ததை பாஸ் மீட்டுக் கொள்ளட்டும், அதன் பிறகு இணையட்டும்!”- மகாதீர்

825
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற சனிக்கிழமையன்று அம்னோ-பாஸ் இணைப்பு சாசனத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னதாக அம்னோ ஒருகாபிர்’ என்றழைக்கப்பட்டதை பாஸ் கட்சி மீட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாஸ் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்ட அக்கூற்று இன்னமும் மீட்டுக் கொள்ளப்படவில்லை என்றும், அது மீட்டுக் கொண்ட பிறகு அம்னோவுடன் இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

அம்னோபாஸ் சாசனம் குறித்து அம்னோ பொதுச் செயலாளர் டான்ஶ்ரீ அனுவார் மூசா மற்றும் பாஸ் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ தக்கியுடின் ஹசான் ஆகியோர் இணைந்து இந்த இணைப்பு பற்றி வெளியிட்ட அறிக்கைத் தொடர்பாக வினவிய போது நம்பிக்கைக் கூட்டணியின் தலைவரான டாக்டர் மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.