Home One Line P2 பிக்பாஸ் 3 : தர்ஷன் வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 : தர்ஷன் வெளியேற்றப்பட்டார்

891
0
SHARE
Ad

சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் 3’ தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தர்ஷன், பிக் பாஸ் இல்லத்திலிருந்து இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

இது பலருக்கும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது. எஞ்சியிருக்கும் பங்கேற்பாளர்களில் இறுதிச் சுற்றுவரை வர வாய்ப்புள்ளவராகக் கருதப்பட்ட தர்ஷன் இந்தக் கட்டத்தில் வெளியேற்றப்படுவது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது.

கமல்ஹாசன் கூட எனக்கும் இது ஏமாற்றமாக இருக்கிறது என நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை நிகழ்ச்சியில் சாண்டி காப்பாற்றப்படுவதாக  அறிவித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் கவின் வெளியேறினாலும் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என அறிவித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களில் முகேன் ராவ் மட்டும் நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து எஞ்சிய பங்கேற்பாளர்கள் அனைவருமே பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட இந்த வாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் பிக்பாஸ் வழங்கிய 5 இலட்சம் ரூபாயை ஏற்றுக் கொண்டு பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறுவதாக கவின் அறிவித்து அதன்படியே வெளியேறினார். 

பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நால்வரான தர்ஷன், சாண்டி, ஷெரின், லோஸ்லியா ஆகியோரில் நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் இல்லத்தில் இன்னும் சாண்டி, முகேன், லோஸ்லியா, ஷெரின் ஆகியோர் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர்.