Home One Line P1 பிடி 3 தேர்வு மீண்டும் எழுத தேவையில்லை!

பிடி 3 தேர்வு மீண்டும் எழுத தேவையில்லை!

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: படிவம் மூன்று மாணவர்கள் பிடி 3 தேர்வை மீண்டும் எழுத வேண்டியதில்லை. இருப்பினும், ஒரு சில மாணவர்கள் இது நியாயமற்ற முடிவு என்றும் அவர்கள் மீண்டும் தேர்வு எழுத விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில்,  பிடி3 பள்ளி அடிப்படையிலான மதிப்பீடு தேர்வு என்றும் அதன் பொறுப்புக்கூறல் பரீட்சை கூட்டமைப்புடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் கல்வி அமைச்சு கூறியிருந்தது.

மாணவர்களுக்கு நீதியை உறுதி செய்வதில் அமைச்சு உறுதிபூண்டுள்ளது. பிடி3 முடிவுகளின் செல்லுபடியாகும் உலகளவில் நடைமுறையில் உள்ள நிலையான நடைமுறைகளின்படி நடத்தப்படும்” என்று அது கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த திங்கள்கிழமை முதல், டெலிகிராம் போன்ற கைபேசி பயன்பாடுகள் மூலமாக உண்மையான தேர்வுத் தாள்கள் கசிந்தன.

கல்வி அமைச்சு தேர்வுத் தாள் கசிவுகள் தொடர்பான கூற்றுக்களை விசாரிப்பதாகக் கூறியிருந்தது. அப்போதிருந்து, படிவம் மூன்று மாணவர்கள் பிடி3 தேர்வை மீண்டும் எழுத வேண்டுமா என்பது குறித்து சமூக ஊடகங்களில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டன. இந்த கசிவுக்கான மூலக் காரணம் யாரென்று இன்னும் தெரியவில்லை.