Home One Line P2 தென்னிந்திய நடிகர் சங்கம்: வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவுகள் அக்டோபர் 15 அறிவிக்கப்படும்!

தென்னிந்திய நடிகர் சங்கம்: வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவுகள் அக்டோபர் 15 அறிவிக்கப்படும்!

777
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு நடத்தப்பட்டு பிறகு அதன் முடிவவினை அறிவிக்கவும் தடைக் கோரப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்நிலையில், விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தேர்தலுக்கு தடை கோரியும், தேர்தலை இரத்து செய்ய கோரியும் மனுத்தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, வழக்கை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவுகள் அன்றைய தேதியில் தெரிவிக்கப்படும் என்று அறிவித்தார்.