Home One Line P1 சிலாங்கூர் சுல்தான்: போலி தகவலை பகிர்ந்தது தொடர்பில் நஜிப் விசாரிக்கப்படுவார்!

சிலாங்கூர் சுல்தான்: போலி தகவலை பகிர்ந்தது தொடர்பில் நஜிப் விசாரிக்கப்படுவார்!

654
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இணையத்தில் போலி தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விசாரிக்கப்படுவார் என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை மூத்த உதவி ஆணையர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

முன்னதாக பேராக் ஜசெக தலைவர் ங்கா கொர் மிங் நஜிப்புக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடிய விரைவில் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜிப் இவ்விவகாரம் தொடர்பாக அழைக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை அவமதித்ததாகக் கூறிய குற்றச்சாட்டில் ங்கா நேற்று செவ்வாய்க்கிழமை, தனது அறிக்கையை புக்கிட் அமான் தலைமையகத்தில் பதிவு செய்தார்.

இருப்பினும்தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவருக்கு, நேற்று அமைச்சரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் காவல்துறையினர் ங்காவை மீண்டும் அழைக்கப்படுவார் என்று மியோர் கூறினார்.

இதற்கிடையில்ஊடகங்களுடன் பேசிய ங்காமுன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முகநூல் பக்கத்தில், அவதூறு செய்யும் நோக்கில் போலி செய்திகளை வெளியிட்டதை விசாரிக்குமாறு காவல் துறையினரை வலியுறுத்தினார்.

சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷாவை வெறுக்கக் கூறி சீனர்களைத் தூண்டியதாகக் கூறப்படும் ‘ங்கா கொர் மிங் சூப்பர் பேன்ஸ் கிளப்முகநூல் கணக்கு உரிமையாளருக்கு எதிராக சிலாங்கூர் சுல்தானின் பாதுகாவலர் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

அந்த பதிவுக் குறித்து நஜிப்பும் தனது முகநூல் கணக்கு மூலம் பகிர்ந்து கொண்டு அதை ங்கா உடன் இணைத்துப் பேசினார். எவ்வாறாயினும், அந்த முகநூல் கணக்கு போலியானது என்றும், அது தமக்கு தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ங்கா வலியுறுத்தினார்.

தனக்கும் ஜசெகக்கும் எதிராக மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டுவதற்காக முகநூலில் போலி இடுகைகளை வெளியிட்டதற்காக மலேசியர்களிடம் நஜிப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ங்கா கோரினார்.