Home One Line P2 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமருக்கு வழங்கப்பட்டது!

அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமருக்கு வழங்கப்பட்டது!

728
0
SHARE
Ad

ஸ்டாக்ஹோம்கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நோபல் வாரம் இன்று வெள்ளிக்கிழமை அமைதிக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடர்ந்தது.  2019-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிசுகளை வென்றவர்களின் பட்டியல் கடந்த அக்டோபர் 7 முதல் 14 வரை அறிவிக்கப்படும்

நேற்று வியாழக்கிழமை, 2018-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸூக்கிற்கு வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்கேவுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பிய பிரதமர் அபி அகமட் அலிக்கு நோர்வே நோபல் குழு முடிவு செய்துள்ளது. 

#TamilSchoolmychoice

இதனிடையே, அக்டோபர் 14-ஆம் தேதி ஆல்பிரட் நோபலின் பொருளாதார அறிவியல் பிரிவு வெற்றியாளரின் அறிவிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

ஒவ்வொரு வெற்றியாளருக்கும் வழங்கப்படும் மொத்த பரிசுத் தொகை ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா(தோராயமாக 940,000 அமெரிக்க டாலர்ஆகும்.