Home One Line P1 அடுத்த ஆண்டு தொடங்கி படிவம் நான்கில் துறை சார்ந்த அணுகுமுறை கிடையாது!

அடுத்த ஆண்டு தொடங்கி படிவம் நான்கில் துறை சார்ந்த அணுகுமுறை கிடையாது!

559
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு முதல், துறை சார்ந்த அணுகுமுறை செயல்படுத்தப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இடைநிலைப் பள்ளி மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

படிவம் நான்கில் துறையைத் தேர்ந்தெடுப்பது நகைப்புக்குரியது. இதன் விளைவாக விஞ்ஞானிகளாக வேண்டிய மாணவர்கள் கலைத் துறையில் நுழைய நேரிடுகிறது. அறிவியல் துறையில் நுழைய விரும்பாத மாணவர்கள், அத்துறையில் நுழைய நேரிடுகிறது.

#TamilSchoolmychoice

எனவே அடுத்த ஆண்டு தொடங்கி, அறிவியல் மற்றும் கலை துறைகளில், மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்க முடியும். நான் அதற்கு அழுத்தம் கொடுக்கிறேன். பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களது கனவுகளைத் தொடரச் செய்கிறார்கள். அது சரியல்ல,” என்று அவர் கூறினார்

இதேபோன்ற அணுகுமுறை, பெரிய தரவு மாணவர்களின் உயர் கல்வி படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிகாட்டும், இது செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

அக்டோபர் 14-ஆம் தேதி ஜெர்மனியில் மலேசிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் சந்திப்பின் போது மஸ்லீ இவ்வாறு கூறியுள்ளதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.