Home One Line P1 சம்பந்தன் நல்லுடலுக்கு விக்னேஸ்வரன்-சரவணன் இறுதி அஞ்சலி

சம்பந்தன் நல்லுடலுக்கு விக்னேஸ்வரன்-சரவணன் இறுதி அஞ்சலி

891
0
SHARE
Ad

செமினி – நேற்று காலமான ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தனின் இல்லத்திற்கு இன்று இரவு வருகை தந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும், மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மற்றும் மஇகாவின் தலைவர்கள் அன்னாரின் நல்லுடலுக்கு தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

செமினியிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் அவரது நல்லுடல் பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் (ஐஜேஎன்) சம்பந்தன் மாரடைப்பால் காலமானார்.

#TamilSchoolmychoice

அவரது இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை நடைபெறும்.

54 வயதே நிரம்பிய அவர் திடீரென மாரடைப்பால் காலமாகியுள்ள செய்தி ஐபிஎப் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவு குறித்து தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரனும் “இந்திய மக்களுக்காகப் போராடியவர், அவர்களுக்காக உரத்துக் குரல் கொடுத்தவர் சம்பந்தன்” என தனது அனுதாபச் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.