Home One Line P1 ரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்!

ரவாங் துப்பாக்கி சூடு: அக்டோபர் 21 இராமசாமி புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க உள்ளார்!

843
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: தனக்கு எதிரான காவல் துறை புகார் அறிக்கையைத் தொடர்ந்து பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி புக்கிட் அமானில் தமது வாக்குமூலத்தை வருகிற திங்கட்கிழமை (அக்டோபர் 21) அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டபுதிய அரசாங்கம் ஆனால் அதே பழைய காவல் படைஎன்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை தொடர்பாக புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வர உள்ளதாக தெரிவித்தார்.

மலேசியாகெசெட் எனும் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி, ரவாங்கில் உள்ள வீட்டுக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று பேரை காவல் துறையினர் சுட்டுக் கொன்றது குறித்து இராமசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

#TamilSchoolmychoice

மாறிவரும் சூழ்நிலையில் காவல் துறையினர் இது போன்ற வழக்குகளை கையாள்வதில் புதிய யோசனைகளைக் கொண்டு வர வேண்டும் என்று தனது கட்டுரையில் இராமசாமி கூறினார்.

மேலும், பின் தொடர்வது போன்ற பழைய நடவடிக்கைகள், கொள்ளையர்கள் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் மற்றும் சந்தேக நபர்கள் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.