Home One Line P2 ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது, இருந்தும் சிறையில் நீடிப்பார்!

ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது, இருந்தும் சிறையில் நீடிப்பார்!

666
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், நிபந்தனை பிணை வழங்கி உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

ஆயினும், அண்மையில் அமலாக்கத்துறைக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அவர் கைது செய்யப்பட்டார். ஆகவே, தற்போது அவர் அமலாக்கத்துறையின் காவலில் இருப்பதால், அவர் சிறையிலேயே தொடர்ந்து இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்ச ரூபாய் பிணைத் தொகையில் சிதம்பரத்திற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாதென்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

#TamilSchoolmychoice

கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், அமலாக்கத் துறையினர் கடந்த புதன்கிழமை அவரை கைது செய்தனர்