Home One Line P1 பகாவ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஜாகர்த்தாவில் இளம் ஆய்வாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்

பகாவ் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஜாகர்த்தாவில் இளம் ஆய்வாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்

2147
0
SHARE
Ad

பகாவ் – அண்மைய ஆண்டுகளில் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு போட்டிகள், ஆய்வு மாநாடுகளில் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர் நமது தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள்.

அந்த வரிசையில் கடந்த அக்டோபர் 8 முதல் 12 வரை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் (IYIA – International Young Inventors Awards) நெகிரி மாநிலத்தின்  தேசிய வகை பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சுமார் 1200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இந்தப் போட்டிகளில் வெற்றி வாகை சூடிய மாணவி மணிஷிகா சரவணன், மாணவி தீர்த்தனா முத்துராமன் மற்றும் மாணவன் சர்வின் சரவணன் ஆகியோர் இந்த வெற்றியின் மூலம் பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.