Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம்: 12 பேருக்கு பிணை வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்!

விடுதலைப் புலிகள் விவகாரம்: 12 பேருக்கு பிணை வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்!

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விடுதலைப் புலிகள் குழுவுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 10 ஆடவர்கள் தொடர்பான வழக்கில், பிணை வழங்கப்படுமா இல்லையா என்பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும்.

உயர்நீதிமன்றத்தில் பிணை தொடர்பான அரசியலமைப்பு சிக்கல்களைக் குறிப்பிடுவதற்காக பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் பாதுகாப்பு விண்ணப்பத்தில் தகுதி இருப்பதாக நீதிபதி ரோசினா அயோப் தீர்ப்பளித்தார்.

இந்த நீதிமன்றம் பிணை உத்தரவு பிறப்பிக்கவில்லை, மேலும் நடவடிக்கைகளை ஒத்திவைக்கவில்லைஎன்று நீதிபதி இந்த வழக்கை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

#TamilSchoolmychoice

விண்ணப்பத்தை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகம் கையாளும் என்பதால் அதை விசாரிப்பது உயர்நீதிமன்றம்தான் என்றும் ரோசினா தெரிவித்தார்.

சாமிநாதன் (34), பாலமுருகன் (37), தீரன் (38), மற்றும் கலைமுகிலன் (28) ஆகியோரின் வழக்கில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

நேற்று வியாழக்கிழமை நடந்த வழக்குகளில், வழக்கறிஞர் ராம் கர்பால் சிங், சொஸ்மாவின் கீழ் தனது கட்சிக்காரர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற அடிப்படையில் நீதிமன்றத்தின் விருப்பப்படி குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் பிணை வழங்குமாறு கோரியதுடன், பிணை விண்ணப்பத்தை உயர் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் மூன்று நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்டதால் இன்று வெள்ளிக்கிழமை மூன்று தனி அமர்வு நீதிமன்றங்களில் பிணை விண்ணப்பம் முன் வைக்கப்பட்டது.

நீதிபதி அஸ்மான் அகமட் முன்னிலையில், இந்த நீதிமன்றம் உட்பட மூன்று நீதிமன்றங்களில் சொஸ்மாவின் கீழ் அரசியலமைப்பு சிக்கலைக் குறிப்பிடுவதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக ராம் கர்பால் தெரிவித்தார்.

அமர்வு நீதிமன்றம் 8-இன் தீர்ப்பின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு காத்திருப்பதாகவும், வழக்கைக் குறிப்பிடுவதற்கு அதே தேதியை (டிசம்பர் 23) நிர்ணயிப்பதாகவும் அஸ்மான் கூறினார்.

சந்த்ரு (38), அறிவானந்தன் (27), தனகராஜ் (26), பூமுகன் (29), சுந்தரம் ரெங்கன் @ ரெங்கசாமி (52) ஆகியோரின் வழக்கில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

இதற்கிடையில், அரசியலமைப்பு பிரச்சனையை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிடுவதற்கான பாதுகாப்பு விண்ணப்பமும் நீதிபதி ரோசினாவின் முடிவைப் பயன்படுத்தி நீதிபதி அஸுரா அல்வி வழங்கினார்.

குணசேகரன் (60), சுரேஷ் குமார் (43) மற்றும் சுப்ரமணியம் (57) ஆகியோரின் வழக்கைக் குறிப்பிடுவதற்காக நீதிபதி டிசம்பர் 23-ஆம் தேதியை நிர்ணயித்தார்.