Home One Line P1 பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட 50 விழுக்காட்டிற்கும் மேலான மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர முறையிடவில்லை!

பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட 50 விழுக்காட்டிற்கும் மேலான மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர முறையிடவில்லை!

694
0
SHARE
Ad

சிரம்பான்: நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்ட 2,776 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மீண்டும் பள்ளி வாழ்க்கையைத் தொடர முறையிடவில்லை என்று மாநில முதலீட்டு, தொழில்துறை, தொழில்முனைவோர், கல்வி மற்றும் மனித மூலதனக் குழுவின் தலைவர் டாக்டர் முகமட் ராபி மாலிக் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்குள் இருப்பதாக முகமட் ராபி கூறினார். அதில் 1,167 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு திரும்புவதற்கு முறையிட்டதாகவும், மேலும் 1,609 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.

நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் 31 வரை, மொத்தம் 392 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 127 பேர் மேல்முறையீடு செய்தனர் மற்றும் பள்ளிக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.”

#TamilSchoolmychoice

நீக்கம் செய்யப்பட்ட கடிதத்தில், நெகிரி செம்பிலான் கல்வித் துறையில் பள்ளிக்குள் மீண்டும் நுழைவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.”

மாணவர்கள் மீண்டும் பெற்றோருக்கு அல்லது பாதுகாவலர்களுடன் கலந்தாலோசிக்கும் செயல்முறை மற்றும் கல்வி (பள்ளி ஒழுக்கம்) சட்டம் 1959-இன் கீழ் அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் அதற்கான தண்டனையை ஏற்க வேண்டும் என்று நினைவூட்டப்படுகிறார்கள்,” என்று அவர் இன்று திங்கட்கிழமை கூறினார்.