Home One Line P1 விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: இந்தியர்களுக்கு எதிரான எச்சரிக்கை!- சார்லஸ் சந்தியாகு

விடுதலைப் புலிகள் கைது விவகாரம்: இந்தியர்களுக்கு எதிரான எச்சரிக்கை!- சார்லஸ் சந்தியாகு

936
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியாவின் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மீது  குற்றம்சாட்டியதன் தொடர்பில், பழிவாங்கும் எண்ணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைத்து தமது கட்சியின் இரு உறுப்பினர்களை காவல் துறை கைது செய்துள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கூறியதாக எப்எம்டி தெரிவித்துள்ளது.

காவல்துறை தெரிவிக்க முயற்சிக்கும் செய்தி என்ன? வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். எல்லோரும் சொஸ்மாவைப் பற்றி பேசுகிறார்கள்.” என்று அவர் கூறினார்.

இந்த தடுப்புக்காவல் இந்திய சமூகத்திற்கு, குறிப்பாக ஜசெகவில் உள்ளவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக தோன்றுகிறது என்று அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

​​நாட்டில் இனப் பதட்டங்களைத் தூண்டியதாகக் கூறப்படும் நாயக்கை விமர்சித்தவர்களைத் தண்டிக்க சொஸ்மா பயன்படுத்தப்பட்டதாக சந்தியாகு கூறினார்.

இந்த நாட்டில் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உடைக்க சொஸ்மா பயன்படுத்தப்படுகிறது.” என்று அவர் கூறினார்.

இருப்பினும், நாயக்கை விமர்சிக்க அவர் பயப்படவில்லை, அவர் மீது ஏராளமான காவல் துறை புகார் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டவர்களின் ஆதாரங்களை காட்டவும், குழுவை புதுப்பிக்கவும், அவர்களுக்கு பணத்தை மாற்றவும் கூறப்பட்ட ஆதாரங்களை வெளிப்படுத்த சந்தியாகு காவல் துறைக்கு சவால் விடுத்தார்.

ஆதாரம் எங்கே? விடுதலைப் புலிகளை இயக்குவதற்கான அடிப்படையாக அவர்கள் முகநூலைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அது தொடர்பான பொருட்களை தங்கள் கைபேசிகளில் வைத்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் கூற முடியாது. யாரும் அதை நம்ப மாட்டார்கள். ”என்று அவர் கூறினார்.

அடுத்த வாரம் காவல் துறை ஆதாரங்களைக் காட்டத் தவறினால், புலிகளின் அனுதாபிகளை பலிகொடுக்கும் ஓர் அரசியல் தந்திரம் இது என்பதை இந்த நடவடிக்கை நிரூபிக்கும் என்று அவர் கூறினார்.