Home One Line P1 “முஸ்லிம்கள் நல்லிணக்க மனப்பான்மையுடன் வாழ வேண்டும்!”- மகாதீர்

“முஸ்லிம்கள் நல்லிணக்க மனப்பான்மையுடன் வாழ வேண்டும்!”- மகாதீர்

637
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்லாமிய ஆளுமைகள் மற்றும் போதனைகளுக்கு முஸ்லிம் அல்லாத சமூகங்கள் ஈர்க்கப்படுவதற்கு முஸ்லிம்கள் நல்ல பழக்கவழக்கங்களை பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

ஆகவே, தப்பெண்ணம், மதங்கள் மற்றும் பிற மக்களை கேலி செய்வது, அத்துடன் கருத்து வேறுபாடுகளுக்கான சண்டை போன்ற எதிர்மறையான நடைமுறைகள் முஸ்லிம்களின் போதகர்களாக இலக்குகளை அடைய ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.

நாம் ஒரு பலவீனமான அணுகுமுறையைக் காட்டி வாழ்க்கையில் தோல்வியடைந்தால் முஸ்லிம் அல்லாதவர்கள் ஏற்றுக்கொள்வது குறைந்துவிடும்.”

#TamilSchoolmychoice

நாம் நல்ல பழக்கவழக்கங்களைக் காட்ட வேண்டும், இறைவனின் அருளால் அவர்கள் இஸ்லாத்தில் ஆர்வம் காட்டுவார்கள், இஸ்லாமிய போதனைகளை நம்புவார்கள்என்று நேற்றிரவு வெள்ளிக்கிழமை கூறினார்.

முஸ்லிம்கள் நல்லிணக்க மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்றும், மற்றவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும்,  சுயநல அணுகுமுறையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று மகாதீர் கூறினார்.

ஒரு நாடு அதன் மக்கள் மோதலில் வாழ்ந்தால் பெரும் பேரழிவை ஏற்படுத்துவதோடு, மற்றவர்கள் அந்நிலைமையைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

விரோதம் இருக்கும்போது, ​​மற்றவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள், எனவே நாடு பாதுகாப்பாக இருக்காது. நம்முடைய உணர்ச்சிகளையும்  கோபத்தையும் குறைத்து மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.