Home One Line P2 169 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே

169 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே

682
0
SHARE
Ad

மும்பை – இன்று சனிக்கிழமை கூட்டப்பட்ட மகராஷ்டிரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில், கடந்த வியாழக்கிழமை நவம்பர் 28-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனக்கு ஆதரவாகப் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து 169 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதை இன்று நிரூபித்தன.

இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே மகராஷ்டிரா மாநில முதல்வராகத் தொடர்வதில் எந்தவிதப் பிரச்சனையும் நேராது எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்றைய சட்டமன்றக் கூட்டத்திலிருந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்றைய சட்டமன்றக் கூட்டம் முறைப்படியும், அரசியல் அமைப்புச் சட்டங்களின்படியும் நடத்தப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார்.