Home One Line P2 நியூசிலாந்து: எரிமலை வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு, 25 பேர் கவலைக்கிடம்!

நியூசிலாந்து: எரிமலை வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு, 25 பேர் கவலைக்கிடம்!

661
0
SHARE
Ad

நியூசிலாந்து: நியூசிலாந்தின் ஒயிட் தீவில் (White Island) எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் மேலும் இரண்டு பேர் ஒரே இரவில் இறந்துள்ளனர். இதனால் இந்த சம்பவத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது என்று சீன செய்தி நிறுவனம் சின்ஹுவா இன்று வியாழக்கிழமை  தெரிவித்துள்ளது.

ஒருவர் மிடில்மோர் மருத்துவமனையிலும், மற்றொருவர் வைகாடோ மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உதவுவதில் காவல் துறையினர் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர்என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கள்கிழமை எரிமலை வெடித்தபோது நாற்பத்தேழு பேர் ஒயிட் தீவில் இருந்தனர்.

#TamilSchoolmychoice

நேற்றுன் புதன்கிழமை காலையில், எரிமலை வெடித்ததில் 6 பேர் இறந்தனர் மற்றும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும், 30 பேர் நியூசிலாந்து முழுவதும் ஏழு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருபத்தைந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.