Home One Line P1 “அதிகார மாற்றம் நாட்டின் முக்கியப் பிரச்சனை இல்லை!”- அன்வார்

“அதிகார மாற்றம் நாட்டின் முக்கியப் பிரச்சனை இல்லை!”- அன்வார்

538
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவி பரிமாற்ற தேதி குறித்த விவகாரத்தை ஒரு பிரச்சனையாக பார்க்காமல் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழுவில் சுமுகமாகப் பேசி முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தை வேண்டுமனே பிரச்சனையாக உருமாற்ற வேண்டாம் என்றும், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழுவே முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நானும் பிரதமரும் மட்டும் கலந்து பேசினால் போதும் என்று சிலரும், ஒரு சிலர் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு கூட்டத்தில் பேச வேண்டும் என்றும் கூறுகின்றனர்.”

#TamilSchoolmychoice

ஆனால், இது ஒரு நல்ல மனநிலையில் செயல்படுத்தப்பட வேண்டும். தற்போது நம் நாட்டின் அடிப்படை பிரச்சனை இது இல்லை என்று நான் நினைக்கிறேன்.” என்று அவர் கூறினார்.