Home One Line P2 அமெரிக்க தூதரகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் ஏவுகணை சுடப்பட்டது!

அமெரிக்க தூதரகத்திற்கு 100 மீட்டர் தொலைவில் ஏவுகணை சுடப்பட்டது!

650
0
SHARE
Ad

பாக்தாத்: பாக்தாத்தின் பசுமை மண்டல பகுதியில் இரண்டு கட்யுஷா ஏவுகணைகள் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் அரசாங்க கட்டிடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈராக்கிய காவல் துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு ஏவுகணை விழுந்ததாகக் கூறியது.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதலில் எந்தவிதமான உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படவில்லை என்று ஈராக் படைகள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.