Home One Line P1 டெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்!

டெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்!

744
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிப் சியான் அப்துல்லா மற்றும் அரசியல் உதவியாளர் அகமட் ரெட்சுவான் ஷாபி ஆகியோர் பெர்சாத்து இளைஞர் பிரிவில் ஏற்றுள்ள பதவிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் அளித்த அறிக்கையில், அகமட் ரெட்சுவானுக்குப் பதிலாக, உதவி செயலாளர் பதவிக்கு டேனியல் சாஹிரான் ஹோ நியமிக்கப்படுவார் என்றும் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

அடிப் சியான் சிலாங்கூர் மாநில பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர்  பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக துணைத் தலைவர் அனாஸ் அகாஷா நாஸ்ரி தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஜாலான் பூச்சோங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சோதனையில் ஆறு பெண்கள் உட்பட 17 நபர்களில் இவர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.