Home One Line P2 நிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை டில்லி ஆளுனர் நிராகரித்தார்!

நிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை டில்லி ஆளுனர் நிராகரித்தார்!

634
0
SHARE
Ad

புது டில்லி: டில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதியன்றுமருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார்.

மேலும், ஓடும் பேருந்திலிருந்து அவர் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவம் இந்திய நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொடூரச் செயலை செய்த அறுவரில் ஒருவன் 18 வயதுக்கு உட்பட்டிருந்ததால், அவன் சீர்த்திருத்தப் பள்ளிக்கு மூன்று ஆண்டுகளுக்கு அனுப்பப்பட்டான். ராம் சிங் எனும் குற்றவாளி சிறைச்சாலையிலேயே தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டான்.

#TamilSchoolmychoice

இதனிடையே, நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளான மேலும் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வருகிற ஜனவரி 22-ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ஆயினும், டில்லி அரசு அதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. அந்த நால்வரில் ஒருவரான முகேஷ் சிங் கருணை கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும், அந்த மனுவைக் காரணமாக சொல்லித்தான் தூக்குத் தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும் டில்லி அரசு தெரிவித்திருந்தது.

தற்போது, அவரின் கருணை மனுவை டில்லி ஆளுனர் அனில் பைசால் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளான பவன் குப்தாமுகேஷ்வினய் சர்மாஅக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்