Home One Line P1 புலாய் மலை: 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுப்பு!

புலாய் மலை: 17,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால கலைப்பொருட்கள் கண்டெடுப்பு!

727
0
SHARE
Ad
படம்: நன்றி தேசிய பாரம்பரியத் துறை

அலோர் ஸ்டார்: பாலிங்கில் உள்ள புலாய் மலையில் (Gunung Pulai) உள்ள பல குகைகளில் சுமார் 17,000 ஆண்டுகள் பழமையான 100-க்கும் மேற்பட்ட வரலாற்றுக்கு முந்தைய பழங்கற்கால (பாலியோலிதிக்) கலைப்பொருட்களைக் கண்டறிந்துள்ளதாக தேசிய பாரம்பரியத் துறை தெரிவித்துள்ளது.

அம்மலைப் பகுதியில் உள்ள குவா கெலாம்பு, குவா தெம்புஸ் மற்றும் குவா அகார் ஆகியவற்றில் நடத்தப்பட்ட புதிய அகழ்வாராய்ச்சியில் கல் கருவிகள், மட்பாண்டங்களின் துண்டுகள் மற்றும் ஆற்றின் பட்டை போன்ற கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் தனது துறை ஆய்வு மேற்கொண்டிருந்தபோது கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய பாரம்பரியத் துறையின் இயக்குநரான மெஸ்ரான் முகமட் யூசோப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சமீபத்திய தொல்பொருள் தரவுகளைப் பெறுவதற்கு தளத்தின் ஆவணங்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கப்பட்டதாகவும், முந்தைய ஆராய்ச்சியாளர்களால் ஆராயப்படாத ஆதாரங்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது

கலைப்பொருட்களின் கண்டுபிடிப்பு, இந்த பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கை இருப்பதை நிரூபிக்கிறது மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய புதிய தடயங்களை எங்களுக்குத் தருகிறதுஎன்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை பாலிங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கண்டுபிடிக்கப்பட்ட சில கலைப்பொருட்கள் பகுப்பாய்வு மற்றும் அவற்றின் வயதை தீர்மானிக்க சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த கலைப்பொருள் உண்மையிலேயே 17,000 ஆண்டுகள் வயதைக் கொண்டிருக்குமானால், மெர்போக் சுங்கை பத்துவில் உள்ள அகழ்வாராய்சி தளத்தைக் காட்டிலும் இது நாட்டின் பழமையானதாகக் கருதப்படும் என்று அவர் தெரிவித்தார்.